shadow

நேற்று நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் அருகில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை ராணுவ தளபதி விபத்து உள்பட 13 பேர் பலியாகினர் என்பதும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்க முயற்சியில் இராணுவ குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

கருப்பு பெட்டி கண்டுபிடித்தால் தான் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் தெரியவரும் என்பதால் அந்த கருப்பு பெட்டியை இன்று அல்லது நாளைக்குள் கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.