குற்றப்பரம்பரை’ படத்தை கைவிட்ட பாரதிராஜா-பாலா
ஆங்கிலேயர் காலத்தில் குற்றப்பரம்பரை’யாக இருந்த இனம் குறித்த திரைப்படத்தை எடுக்கவுள்ளதாக பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்து அதற்கான பூஜையையும் போட்டார். அதே நேரத்தில் இதே கதையை பாலாவும் படமாக்கவுள்ளதாக கூறப்பட்டதால் இருவருக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு பின்னர் ஒருவருக்கொருவர் ஊடகங்களில் விமர்சனமும் செய்து கொண்டனர்.
இந்நிலையில் தற்போது இருவருமே இந்த படத்தை கைவிட்டு வெவ்வேறு படங்களில் பிசியாகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. பாரதிராஜா சூப்பர் ஹிட் ஆன ‘அலைகள் ஓய்வதில்லை படத்தின் இரண்டாம் பாகத்தையும், பாலா புதுமுகங்கள் நடிக்கும் காதல் படம் ஒன்றையும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
‘அலைகள் ஓய்வதில்லை 2’ படத்தில் பிரபல இயக்குனர் வசந்த் மகன் நாயகனாக நடிக்கவுள்ளார். அதேபோல் பாலாவும் தனது புதிய படத்திற்கான நடிகர், நடிகைகளை தேடும் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.