பெங்களூரில் 100 வீடுகள் இடிப்பு: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களா?
பெங்களூர் முனிசிபல் கார்ப்பரேசன் மற்றும் பெங்களூரு போலீசார் இணைந்து பெல்லந்தூர் என்ற பகுதியில் இருந்த 100 வீடுகளை கடந்த ஞாயிறு அன்று அடித்து, அங்கு குடியேறியவர்களை வெளியேற்றினர்.
இந்த 100 வீடுகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த இடத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் இடத்தின் உரிமையாளர் இதுகுறித்து கூறுகையில் ‘இங்கு வாழ்ந்தவர்கள் அனைவரும் வடக்கு கர்நாடகா, வட இந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும் அதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருந்தும் போலீசார் அதனை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.