shadow

சசிகலா குறித்த உண்மையை வெளிப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரிக்கு டிரான்ஸ்பர் பரிசு

சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக கூறிய கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா சில தினங்களுக்கு முன் குற்றம் சாட்டினார்.

சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்குவதற்காக 2 கோடி வரை பணம் வங்கப்பட்டதாக குற்றச்சாட்டை கர்நாடக சிறைத்துறை டிஐஜி புகாரை முன்வைத்தார். இது பல சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், ரூபா சிறைத்துறை டிஐஜி பொறுப்பிலிருந்து பெங்களூரு நகர போக்குவரத்துப் பிரிவு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

கர்நாடக அரசின் உத்தரவை மீறி ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில் ரூபா பணியிட மாற்றப்பட்டுள்ளார். இவரை மட்டும் பணியிட மாற்றம் செய்தால் இந்த காரணத்திற்காக தான் என்று விமர்சனம் எழும் என்று அவருடன் மேலும் 4 போலீஸ் உயர் அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply