பிரபல நடிகை ஒருவர் சிங்கப்பூரில் நகை திருடி கையும் களவுமாக பிடிபட்டதாக செய்தி வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல பெங்காலி மொழி நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. சிங்கப்பூரில் நடந்த பெங்காலி மொழி படவிழாவில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்ற நடிகை ஸ்வஸ்திகா, ஓய்வு நேரத்தில் ஷாப்பிங் சென்றார். அப்போது நகைக்கடையில் ஒன்றின் உள்ளே சென்று நகைகள் வாங்குவதற்காக டிசைன்களை பார்த்துக்கொண்டிருந்தபோது, ரூ.15000 மதிப்புமிக்க தோடு ஒன்றை தனது கைப்பையில் யாரும் பார்க்காத நேரத்தில் போட்டுள்ளார்.
ஆனால் இதை சிசிடிவி கேமராவில் பார்த்த கடை நிர்வாகிகள் அவரை தனியே அழைத்து சென்று அவரது கைப்பையை சோதனை போட்டனர். கடையின் உள் அறையில் சிறிது நேரம் சிறைவைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் கடை நிர்வாகிகளிடம் கதறி அழுது தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டாராம்.
இதையடுத்து அவரை எச்சரிக்கை மட்டும் செய்து அனுப்பிவிட்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தங்கள் சமூகவலைத்தளத்தில் தகவல் பதிவு செய்ததால் இந்த சம்பவம் காட்டுத்தீ போல மிக வேகமாக பரவிவிட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.