தேவையானவை: துருவிய பீட்ரூட் அரை கப், வறுத்து, கொரகொரப்பாக பொடித்த வேர்க்கடலை கால் கப், பூண்டு ஒரு பல், பச்சை மிளகாய் – 2, தேங்காய்த் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் ஒரு கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தயிரைக் கடைந்து அரைத்த விழுது, துருவிய பீட்ரூட், பொடித்த வேர்க்கடலை, உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்தால்… ராய்த்தா ரெடி!
இது… சாம்பார் சாதம், புலாவ், பிரியாணி அனைத்துடனும் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
Leave a Reply
You must be logged in to post a comment.