சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் இருந்துகொண்டு சமூக பணிகளை செய்துவரும் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண்பேடி இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள்ளார். சென்னை ஐ.ஐ.டி யில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதற்காக அவர் சென்னை வந்துள்ளார்.
அன்னா ஹசாரே இயக்கத்தில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரிந்தபோதும் தொடர்ந்து அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு அளித்து வரும் கிரண்பேடி நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “நான் எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியையும் சார்ந்து இல்லை. ஆனாலும் வரும் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று நரேந்திரமோடி பிரதமராக வேண்டும் என விரும்புகிறேன் ” என்று கூறினார்.
நாட்டில் நிலையான ஆட்சியை பாரதிய ஜனதாவால் மட்டுமே தற்போதைய நிலையில் கொடுக்கமுடியும் என தான் நம்புவதாகவும் கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியில் சேருவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் எந்த அரசியல் கட்சியிலும் சேருவதற்கு எனக்கு விருப்பம் இல்லை என்றும் கடைசிவரை அன்னா ஹசாராவின் இயக்கத்தில் இருந்து சமூக தொண்டு செய்வது மட்டுமே எனது லட்சியம் என்றும் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.