அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசர் வெளியான ஒருசில மணி நேரங்களில் யூடியூப் இணையதளத்தில் சுமார் 5 லட்சம் பேர் இந்த டீசரை பார்த்துள்ளதால் கோலிவுட் படவுலகம் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் என்னை அறிந்தால் படத்தின் டீசருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை பார்த்து ஷங்கர் உள்பட ‘ஐ’ படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜனவரி 9ஆம் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ள ‘என்னை அறிந்தால்’ படம் ரிலீஸாகிய பின்னர் வெறும் 6 நாள் இடைவெளியில் மிகப்பெரிய பட்ஜெட் படமான ‘ஐ’ படத்தை வெளியிட ஷங்கர் தற்போது தயங்குவதாக கூறப்படுகிறது. எனவே ‘என்னை அறிந்தால்’ படத்தை ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் செய்ய வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
ஆனால் வரும் 7ஆம் தேதி ‘என்னை அறிந்தால்’ படத்தின் இறுதிப்படப்பிடிப்பை முடிக்கவுள்ள கவுதம் மேனன், ஜனவரி 1ஆம் தேதிக்குள் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை முடித்துவிட்டு சென்சாருக்கும் அனுப்பி தயார் செய்துவிடுவாரா என்பது கேள்விக்குறிதான். ஜனவரி 9ஆம் தேதிதான் ‘என்னை அறிந்தால்’ படம் ரிலீஸ் என்பது உறுதியானால்
‘ஐ’ படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரிக்கு மாற்றிவிட ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே ஒரு நிமிடம் ஓடக்கூடிய டீசருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்தே அதிர்ச்சியாகியுள்ள ஷங்கர், இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு என்ன முடிவு எடுக்கப்போகின்றார் என்பதை அறிய ஆவலுடன் இருப்பதாக அஜீத் ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.