shadow

fashion1பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் அழகிப் போட்டி நடத்த தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய அழகிப் போட்டியில் சிறந்த அழகிக்கான பட்டம் வென்ற மாணவி ஒருவர் தனக்கு தருவதாக ஒப்புக்கொண்ட ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை பல்கலைக்கழகம் நிர்வாகம் வழங்கவில்லை என்று புகார் தெரிவித்து, அந்த  மாணவி தரப்பில் இருந்து வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த மாணவியின் மனு நேற்று  சென்னை ஐகோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்தபோது, “பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் அழகிப் போட்டி நடத்த தடை விதித்ததோடு, வரும் 20 ஆம் தேதிக்குள் தமிழக அரசும், போட்டி நடத்திய பொறியியல் பல்கலைக் கழகமும் பதிலளிக்கவேண்டும் என்று  அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

Leave a Reply