இன்று முதல் 5 நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டும்: ஏன் தெரியுமா

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது நிலையை எட்டிவிடக்கூடாது என்பதற்காக மத்திய மாநில அரசுகள் போராடி வருகின்றனர்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி அதாவது இன்று முதல் அஷ்டமி திருவாதிரையில் வருகிறது என்றும் அதிலிருந்து ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை மிக மிக கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் என்றும் மன உறுதியுடன் மட்டுமல்ல விழிப்பாக இருக்கவேண்டும் என்றும் தெய்வ வழிபாட்டை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் செய்திகள் பரவி வருகிறது

வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி உண்மையா? என்பதை ஜோதிடம் அறிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

Leave a Reply