பி.இ மற்றும் பி.டெக் இரண்டாம் ஆண்டு நேரடியாக சேரும் மாணவர்களுக்கான விண்ணப்ப படிவங்கள் நாளை முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுளது.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் டிப்ளமோ முடித்துவிட்டு, நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கான விண்ணப்ப படிவங்கள் நாளை அதாவது மே 13 முதல் ஜூன் மாதம் 5ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் தேவைப்படும் மாணவர்கள் ரூ.300 டிமாண்ட் டிராப்ட் எடுத்து பெற்றுக்கொள்ளலாம். SCA/SC/ST பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும்.
சென்னை உள்பட 25 நகரங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும் என்றும் சென்னையில் கிண்டியில் உள்ள Directorate of Technical Education,அலுவலகத்திலும், புரசைவாக்கத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூன்6 ஆகும்
Leave a Reply
You must be logged in to post a comment.