shadow

36 நகரங்களில் ஃபேன்பார்க்: பெரிய திரையில் இலவசமான ஐபிஎல் போட்டிகள்

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டியை நேரிலும் தொலைக்காட்சி மூலமும் கோடிக்கணக்கானோர் பார்த்து ரசிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள 36 நகரங்களில் ஐ.பி.எல். போட்டிகளை இலவசமாக ரசிகர்கள் கண்டு களிக்க மைதானங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு பி.சி.சி.ஐ. அமைத்த ஃபேன்பார்க் என்றா திட்டத்தின்படி முக்கிய நகரங்களில் பெரிய அளவிலான திரைகள் அமைக்கப்பட்டு ஐ.பி.எல். போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்த ஃபேன்பார்க் திட்டம் 19 மாநிலங்களில் 36 நகரங்களில் செயல்படுத்தப்படுகிறது. 36 நகரங்களில் உள்ள முக்கிய மைதானத்தில் பெரிய அளவிலான திரைகள் அமைக்கப்படும். அந்த திரையில் ஐ.பி.எல். போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்த ஆண்டு தமிழகத்தில் நெல்லையில் மட்டும் இந்த ஃபேன் பார்க் அமைக்கப்பட்டு அனைத்து போட்டிகளையும் பெரிய திரையில் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது

Leave a Reply