கொரோனா தடுப்பு நிதி: பிசிசிஐ கொடுத்த ரூ.51 கோடி

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மத்திய அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கொரோனாவிடம் இருந்து மக்களை காப்பாற்ற போராடி வருகிறது
இந்த நிலையில் மத்திய அரசுக்கு கைகொடுக்கும் வகையில் டாடா நிறுவனம் ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளது என்பதையும் நடிகர் அக்ஷய்குமார் 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது பிசிசிஐ அமைப்பை ரூபாய் 51 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இதுபோன்று கோடிக்கணக்கில் நிதி உதவி கிடைக்கும் என்பதால் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து இந்திய மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply