shadow

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ரோகித் சர்மா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

சமீபத்தில் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது