அத்தை குளிப்பதை வீடியோ எடுத்த மருமகன் சிறையில் அடைப்பு

33 வயது பெண் ஒருவர் குளிப்பதை 19 வயது இளைஞன் ஒருவன் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்த விவகாரம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

33 வயது பெண் ஒருவர் இன்று காலை தனது குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது குளியல் அறையின் ஜன்னல் வழியாக ஒரு இளைஞன் வீடியோ எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்

உடனே சுதாரித்து அவர் வெளியே வந்து அந்த இளைஞனைப் பிடித்து உதைத்துபோது தான் அந்த இளைஞன் தனது நெருங்கிய உறவினர் என்றும் இருவரும் அத்தை மருமகன் உறவை கொண்டவர்கள் என்றும் தெரிந்தது

இரண்டு குடும்பங்களும் பக்கத்து பக்கத்து வீட்டிலிருந்து குடும்ப அளவிலும் நெருக்கமாக இருந்த போதிலும் அந்தப் பெண் இது குறித்து போலீசில் புகார் செய்ய, போலீசார் அந்த இளைஞனைப் பிடித்து சிறையில் அடைத்தனர். அவனுடைய மொபைல் போனும் கைப்பற்றப்பட்டு அதிலிருந்த குளியல் வீடியோ டெலிட் செய்யப்பட்டது

Leave a Reply