shadow

பார்சிலோனா கால்பந்து அணியின் நட்சத்திர விளையாட்டு வீரர் லயோனல் மெஸ்ஸி, காயம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வில் இருந்தார். காயம் ஆறியபின்னர் நேற்று மீண்டும் களமிறங்கிய மெஸ்ஸி, ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து போட்டியில் அபாரமாக விளையாடி 2 கோல்கள் போட்டு அசத்தினார்.

தற்போது ஸ்பெயின் நாட்டில் ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பார்சிலோனா – கிடாஃபி அணிகளுக்கிடையே ஆன போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. இரண்டு மாதங்கள் ஓய்வுக்கு பின்னர் களமிறங்கிய மெஸ்ஸி, மிக அபாரமாக விளையாடி இரண்டு கோல்கள் போட்டார். இந்த அணியின் மற்ற வீரர்கள் இரண்டு கோல்கள் போட்டனர். ஆனால் கடைசிவரை போராடியும், கிடாஃபி அணியினரால் ஒருகோல் கூட போட முடியவில்லை. எனவே 4-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா அபார வெற்றி பெற்றது.

இரண்டு மாதங்கள் மெஸ்ஸி இல்லாதபோது பார்சிலோனா மிகவும் நெருக்கடியாக விளையாடியது. ஆனால் மெஸ்ஸி மீண்டும் வந்தபின்னர் அணியினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாக பார்சிலோனா அணியின் கோச் கூறியுள்ளார்.

Leave a Reply