ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 10 மற்றும் 11ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களிலும் வேலைநிறுத்தம் செய்ய பொதுத்துறை வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தை தவிர்க்க சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தொழிலாளர் ஆணையர் பி.கே. சன்வாரியாவுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை ஒட்டி இந்த வேலை நிறுத்தம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வங்கி அமைப்பு உயர்த்திய ஊதிய உயர்வு வெறும் 0.5 சதவிகிதம் மட்டுமே இருந்ததால் தொழிலாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றும், தங்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான ஊதிய உயர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என்று வங்கி கூட்டமைப்பின் சங்கத்தலைவர் வெங்கடாச்சலம் கூறினார். நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

Leave a Reply