shadow

ind vs bangவங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, நேற்று மிர்பூர் நகரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. வங்கதேசத்தின் தொடக்க வீரர்கள் தமீம் இக்பால் 60 ரன்களும், சவும்யா சர்க்கார் 54 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுக்க அடுத்து வந்த வீரர்களும் பொறுப்பாக ஆடியதால், வங்கதேச அணி 49.4 ஓவர்களில் 307 ரன்கள் குவித்தது.

308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகியோர்கள் சிறப்பாக விளையாடியபோதிலும், அதன்பின்னர் வந்த வீரர்கள் பொறுப்பற்ற முறையில் ஆடி தங்கள் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். ரோஹித் சர்மா 63 ரன்களும், தோனி 40 ரன்களும், தவான் 30 ரன்களும், ஜடேஜா 32 ரன்களும் எடுத்திருந்தபோதிலும் இந்திய அணி 46 ஓவர்களில் 228 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

வங்கதேச பந்துவீச்சாளர் முசாபர் ரஹ்மான் மிக அற்புதமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தியதால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Leave a Reply