shadow

வங்கதேசத்தில் இன்று பந்த். ஜமாத் இ இஸ்லாமி தலைவருக்கு தூக்கு தண்டனை எதிரொலி:
bangladesh
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காள தேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி தலைவர் மோதியூர் ரஹ்மான் நிசாமி நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக நேற்று தூக்கிலிடப்பட்டார். இதனை கண்டித்து இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த போரில் வங்கதேசத்தின் முக்கிய தலைவர் மோதியூர் ரஹ்மான் நிசாமி போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. அதன் அடிப்படையில் அவருக்கு நேற்று தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் வங்கதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஜமாத் இ இஸ்லாமி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: “73 வயது முதியவரான நிசாமிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது திட்டமிட்ட படுகொலையாகும். இதை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். போராட்டத்துக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிசாமியின் உடல் பப்னா சாத்தியாவில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. போர்க்குற்றங்கள் தொடர்பாக நிசாமி உட்பட இதுவரை 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply