shadow
ஐபிஎல் 2018: பஞ்சாப் அணியை வீழ்த்தியது பெங்களூர்
நேற்று பெங்களூரில் நடந்த பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 47 ரன்கள் எடுத்தார்.
இதன் பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி, 19.3 ஓவர்களில் 6  விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் அபாரமாக விளையாடி 57 ரன்கள் எடுத்தார். இருப்பினும் இந்த போட்டியில் பஞ்சாப் பேட்ஸ்மேன்களை பதம் பார்த்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய பெங்களூரு அணியின் உமேஷ் யாதவ், ஆட்டநாயகன் விருதுகு தேர்வு பெற்றார்

Leave a Reply