சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறைத்தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கிய கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா திடீரென கர்நாடகா ஊழல் தடுப்பு கண்காணிப்பு நீதிமன்றப் பதிவாளராக பணிமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கு முன்னால் குன்ஹா இந்த பதவியில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதே பதவிக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இவர் வகித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பொறுப்பை, பெங்களூரு சிபிஐ நீதிமன்ற நீதிபதி சோமராஜ் கூடுதலாக கவனிப்பார் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.