shadow

வங்கதேசம் அபாரம்: நியூசிலாந்தை தோற்கடித்து 2வது இடம் பெற்றது

சாம்பியன்ச் டிராபி கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்து வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. இதனால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பையும் அந்த அணி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 265 ரன்கள் எடுத்தது. இதனால் 266 ரன்கள் எடுத்தால் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணி, ஒரு கட்டத்தில் 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தாலும், ஷாகிப் ஹாசன் மற்றூம் மெஹ்மதுலா ஆகியோர்களின் அபார ஆட்டத்தினால் 47.2 ஓவர்களில் 268 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஷாகிப் ஹாசன் 114 ரன்களும் மெஹ்மதுலா 102 ரன்களும் எடுத்தனர்.ஷாகிப் ஹாசன் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார். இந்த போட்டியின் முலம் 3 புள்ளிகள் எடுத்து 2வது இடத்தில் வங்கதேசம் உள்ளது. அடுத்து நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தால் வங்கதேசம் அரையிறுதிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply