shadow

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் 20ஆம் தேதி முழுஅடைப்பு?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்து வரும் நிலையில் நமது அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் தற்போது தற்போது போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தின் அடுத்தகட்டமாக புதுச்சேரியில் வரும் 20ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என புதுச்சேரி போராளிகள் இயக்கம் திட்டமிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஒரு உறுதியான தீர்வு ஏற்படவில்லை என்றால் தமிழகத்திலும் முழு அடைப்பு போராட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று தமிழ் அமைப்புகள் அறிவித்துள்ளன,.

Leave a Reply