தாடி பாலாஜி மீது வன்கொடுமை புகார் கொடுத்த மனைவி. அதிர்ச்சி தகவல்
பிரபல நகைச்சுவை நடிகரும், கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவருமான தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா காவல்நிலையத்தில் வன்கொடுமை புகார் ஒன்றை அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பாலாஜி-நித்யா காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி. இவர்களுக்கு போர்ஷிகா என்ற மகள் உள்ளார்,. இருவரும் இணைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக முற்றி தற்போது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவுக்கு பெரிதாகியுள்ளது.
நித்யா நேற்று மாதவரம் காவல்நிலையத்தில் பாலாஜி மீது திடீரென்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தனது சமுதாயத்தை பற்றி பாலாஜி தகாத வார்த்தைகளை பேசியதாகவும், தன்னை கொடுமை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.