நடிகர் பாலசரவணன் ஆவேசம்
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்த நிலையில் முதல்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ஆம் தேதி முடிவடைந்து, தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது
இந்த ஊரடங்கு மே மாதம் மூன்றாம் தேதி வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென தற்போது ஏப்ரல் 20ஆம் தேதி முதல் ஒரு சிலவற்றிற்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதில் ஒன்றாக ஏப்ரல் 20ஆம் தேதி முதல் டோல்கேட் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசின் இந்த அறிவிப்பு பிரபல காமெடி நடிகர் பாலசரவணன் தனது டுவிட்டரில் ஆவேசமாக ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஊரடங்கு மே 3 வரை…ஆனால் ஏப்ரல் 20ந் தேதியிலிருந்து டோல்கேட்டில் வசூல்.. இப்பொழுது காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களே அதிகம்.. இந்த மாதிரி சூழ்நிலையிலயும் அந்த வண்டிகளை நிறுத்தி காசு வாங்க நினைக்கும் எண்ணம் துரோகம்…வாழ்க இந்தியா
பாலசரவணனின் இந்த டுவீட்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.