‘பைரவா’ டப்பிங் ஆரம்பம். அடுத்த பட அறிவிப்பு எப்போது?
இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘பைரவா’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் நேற்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக விஜய் தனது பகுதியின் டப்பிங்கை தொடங்கிவிட்டார் என்றும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் இந்த பணியை முடித்துவிடுவார் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
விஜய் டப்பிங்கை முடித்தவுடன் கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் டப்பிங்கை தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் திரையிட திட்டமிட்டிருப்பதால் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெகுவிரைவில் வெளிவரவுள்ளது. அவருடைய 61வது படத்தை அட்லி இயக்குவார் என்பதும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.