திமுக கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டாலும் சென்னை, கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டிற்கு சென்று தனது தாயார் தயாளு அம்மாளை மு.க.அழகிரி சந்தித்து பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறிது காலமாக உடல்நலம் இன்றி இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவியும், மு.க.அழகிரியின் தாயாருமான தயாளு அம்மாள் அவர்களை சந்திக்க நேற்று கோபாலபுரம் வீட்டிற்கு மு.க.அழகிரி வந்தார். அவரை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசி, உடல்நலம் விசாரித்ததாக செய்திகள் கூறுகின்றன. கருணாநிதி வீட்டில் இல்லாத சமயம் மு.க.அழகிரி வந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அழகிரி கருணாநிதியின் வீட்டிற்கு சென்ற நேரத்தில் கருணாநிதி, சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அழகிரி தயாளு அம்மாளை தவிர வேறு யாரையும் சந்திக்கவில்லை என அழகிரி தரப்பினர் கூறுகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.