shadow

azhagiriதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இன்று சென்னை வந்த மு.க.அழகிரி, சென்னை விமான நிலையத்தில் செய்தியளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடையும். ஒன்றிரண்டு தொகுதியில் வெற்றி பெற்றாலே பெரிய விஷயம். என்னை நீக்கியதன் பயனை திமுக கண்டிப்பாக அனுபவித்தே தீரும் என மு.க.அழகிரி ஆவேசமாக கூறியுள்ளார்.

என் மீது நடவடிக்கை எடுத்தவர்கள் மீது நான் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் மீது இரண்டு மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை.

திமுகவின் தோல்விக்காக நான் எதையும் தனியாக செய்ய வேண்டியதில்லை. தோல்விக்கு தேவையான எல்லாவற்றையும் கட்சியே செய்துவிட்டது என்றார்.

Leave a Reply