டெல்லியில் முதல்வர் பழனிச்சாமியுடன் அய்யாக்கண்ணு சந்திப்பு
தமிழக விவசாயிகள் அய்யாக்கணு தலைமையில் கடந்த சிலநாட்களாக இரண்டாவது கட்டமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார்
அப்போது டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த முதல்வரை தென்னிந்திய நதிகள் பாதுகாப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்தார். பயிர்கடன் ரத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து முதல்வரிடம் அய்யாக்கண்ணு தரப்பினர் வலியுறுத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
முதல்வரின் சந்திப்புக்கு பின்னர் விவசாயிகள் தங்கள் போராட்டம் தொடரும் என்றும், மத்திய அரசு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதிமொழி கொடுக்கும் வரை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுக்கே இடமில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.