shadow

arvind kejriwal

டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை திடீரென கன்னத்தில் அடித்த ஆட்டோரிக்ஷா நபர் இன்று அவருடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

நேற்று டெல்லியில் சுல்தான்புரி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென வந்த ஆட்டோரிக்ஷா நபர் அவருடைய கன்னத்தில் அடித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால், தன்னை அடித்த ஆட்டோரிக்ஷா நபரின் வீட்டிற்கு நேரில் சென்றார். அவர் தன்னை அடித்ததற்கான காரணத்தை நேரில் கேட்டு தெரிந்து கொள்வதற்காகவே அவருடைய வீட்டிற்கு சென்றதாக கூறினார்.

திடீரென தன்னுடைய வீட்டிற்கே வந்த அரவிந்த கெஜ்ரிவாலை பார்த்து அதிர்ச்சியடைந்த லாலி என்ற அந்த ஆட்டோ நபர், கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டதோடு, அரவிந்த் கெஜ்ரிவாலின் காலிலும் விழுந்தார். தெரியாமல் தான் அடித்துவிட்டதாகவும், தன்னை மன்னிக்கும்படியும் அவர் வேண்டி கேட்டுக்கொண்டார். அரவிந்த் கெஜ்ரிவால் அவரை மன்னித்துவிட்டு பின்னர் அவருக்கு ஆறுதல் கூறினார்.

 

[embedplusvideo height=”300″ width=”600″ editlink=”//bit.ly/1e9AUcc” standard=”//www.youtube.com/v/yjv9vcf37-8?fs=1″ vars=”ytid=yjv9vcf37-8&width=600&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep1017″ /]

Leave a Reply