இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரகளான வார்னர் மற்றும் ரோஜர் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்துள்ளனர். வார்னர் 101 ரன்களும், ரோஜர்ஸ் 95 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
வாட்சன் 61 ரன்களுடனும், கேப்டன் ஸ்மித் 82 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.