shadow

ஆஷஷ் கிரிக்கெட் தொடர். 405 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வி

cricketஇங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து வரும் ஆஷஷ் தொடர் கிரிக்கெட் போட்டிகளில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அணி, அதற்கு பழிவாங்கும் வகையில் இரண்டாவது போட்டியில் 405 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த 16ஆம் தேதி ஆரம்பித்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 566 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 312 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

இங்கிலாந்து அணி ஃபாலோ ஆன் ஆகியபோதிலும், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி, 2 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தபோது மீண்டும் டிக்ளேர் செய்தது. 508 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி வெறும் 103 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 405 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

முதல் இன்னிங்சில் 215 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 58 ரன்களும் குவித்த ஆஸ்திரேலியாவின் ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளது.

Leave a Reply