இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் மிகவும் பிரமாதமாக விளையாடி 138 ரன்கள் அடித்தார். ரெய்னா 51 ரன்கள் அடித்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கஆளில் 8 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்தது.
268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 49 ஓவர்களில் 269 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பின்ச் 96 ரன்களும், ஸ்மித் 47 ரன்களும், வாட்சன் 41 ரன்களும் எடுத்தனர்.
6 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.