20 வயதுக்குள் 500 ரன்கள். ஆஸ்திரேலிய வீரர் ரெயின்ஷா சாதனை
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடர் போட்டிகளில் விளையாடி வருகிறது. புனெ டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும், பெங்களூரு டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று ராஞ்சியில் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிறு 299 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. கேப்டன் ஸ்மித் 117 ரன்களுடனும், மாக்ஸ்வெல் 82 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக ரெயின்ஷா என்பவர் களத்தில் இறங்கி 44 ரன்கள் எடுத்தார். இவர் 20 வயதிற்குள் 500 ரன்கள் எடுத்து சாதனை செய்துள்ளார். இதற்கு முன்னர் கிளெம் ஹில் என்பவர் 21 வயதிற்குள் 482 ரன்கள் குவித்த நிலையில் 20 வயதுக்குள் 500 எடுத்த வீரர் என்ற பெருமையை ரெயின்ஷா பெற்றுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.