இந்தியாவை அடுத்து நியூசிலாந்து அணியிடமும் தொடரை இழந்தது ஆஸ்திரேலியா
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த சேப்பல்-ஹேட்லி டிராபி கிரிக்கெட் போட்டி தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இன்று மூன்றாவது ஆட்டம் ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் நியூசிலாந்தை பேட்டிங் செய்யும்படி கூறியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது. குப்தில் 59 ரன்களும், மெக்கல்லம் 47 ரன்களும் எடுத்தனர்.
247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 43.4 ஓவர்களில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து பரிதாபமாக தொடரை இழந்தது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரி 3-0 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா, அடுத்ததாக நியூசிலாந்திடம் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.