shadow

cricketஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் மெல்போர்ன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 4வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய அணியை விட ஆஸ்திரேலியா 326 ரன்கள் கூடுதலாக பெற்றுள்ளது.

முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விராத் கோஹ்லி 169 ரன்களும், ரஹானே 147 ரன்களும், எடுத்தனர். அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாட ஆரம்பித்த ஆஸ்திரேலிய அணி மார்ஷ் மற்றும் ரோஜர்ஸ் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் 261 ரன்கள் எடுத்துள்ளது. ரோஜர்ஸ் 69 ரன்களும், மார்ஷ் 62 ரன்களும் எடுத்துள்ளனர்.

இன்னும் ஒருநாள் மட்டுமே மீதியுள்ள நிலையில் இந்த போட்டி டிரா ஆகுமா? அல்லது வெற்றி தோல்வியில் முடியுமா? என்பது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

Leave a Reply