இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று போதிய வெளிச்சமின்மையால் நிறுத்தப்பட்டது.
நேற்றைய முதல் நாள் ஆட்டமுடிவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை துவங்கிய ஆஸ்திரேலியா அணி இன்றைய நாள் ஆட்டம் முடிவின்போது 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்துள்ளது. நேற்று முதுகு வலி காரணமாக ஓய்வு பெற்ற கேப்டன் கிளார்க் இன்று களமிறங்கி சதமடித்தார்.
ஸ்மித் 162 ரன்களுடனும், ஜான்சன் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகாமல் உள்ளனர். இந்திய அணியின் தரபில் ஷமி, ஆரோன், கே.வி.ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.