அட்லியின் அடுத்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்
ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் அட்லிக்கு தமிழில் யாரும் வாய்ப்பு தரவில்லை. இவருடைய படம் அளவுக்கு மீறிய பட்ஜெட்டில் உருவாகுவதாகவும், சொன்ன நேரத்தில் படத்தை முடித்து கொடுக்க மாட்டார் என்பதாலும் இவருக்கு தமிழ் தயாரிப்பாளர்களும் ஹீரோக்களும் அடுத்த வாய்ப்பினை தரவில்லை
இதனையடுத்த அட்லி தெலுங்கு ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதில் அட்லி கூறிய கதை ஜூனியர் என்.டி.ஆருக்கு பிடித்துவிட்டதால் அவருடைய அடுத்த படத்தை அட்லி இயக்குவார் என தெரிகிறது.
ஜூனியர் என்.டி.ஆர், தற்போது இயக்குனர் ராஜமெளலி படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் முடிந்தவுடன் அவர் அட்லி படத்தில் நடிப்பார் என தெரிகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.