மீண்டும் விஜய்யை இயக்கும் ‘தெறி’-ஜில்லா இயக்குனர்கள்
இளையதளபதி விஜய் நடித்த 59வது படமான ‘தெறி’ திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் தெறிக்கவுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் நடிக்கும் 60வது படத்தின் தொடக்கவிழாவுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கியது.
இந்நிலையில் விஜய்யின் 61வது மற்றும் 62வது படங்களை இயக்க கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் வரிசையில் உள்ளனர் ஆனால் ‘தெறி’ இயக்குனர் அட்லிக்கும், ‘ஜில்லா’ இயக்குனர் நேசனுக்கும் மீண்டும் அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
பரதன் இயக்கும் ‘விஜய் 60’ படத்தை முடித்தவுடன் மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை முடித்த பின்னர் ‘ஜில்லா’ இயக்குனர் நேசன் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஜில்லா படத்திற்கு பின்னர் மீண்டும் வேறு படங்களை இயக்காமல் விஜய்க்கு மேலும் ஒரு கதையை தயார் செய்து நேசன் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.