அதர்வா முரளியின் முதல் பட டைட்டில் அறிவிப்பு
பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா நடித்த முதல் படம் ‘பாணா காத்தாடி’ என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதர்வா தயாரித்து நடிக்கும் முதல் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘செம போத ஆகாத’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதர்வா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
சண்டி வீரன், ஈட்டி, கணிதன் ஆகிய தொடர் வெற்றி படங்களில் நடித்த அதர்வா, அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கிக் ஆஸ் எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘பாணா காத்தாடி’ படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கி வருகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவும், ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பும் செய்கிறார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. டைட்டிலே போதையுடன் இருப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.