நித்யானந்தா உருவாக்கும் ‘கைலாஷ் கிரிக்கெட் அணி’: அஸ்வின் கேப்டனா?

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நித்தியானந்தா, ஈக்வடார் தீவு அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி உள்ளதாகவும், அந்த தீவை அவர் கைலாஷ் என்ற ஒரு புதிய நாடாக அறிவித்துள்ளதாகவும், அந்த நாட்டில் குடிமகனாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இந்துக்கள் மட்டுமே இந்த நாட்டில் குடிமகனாக விண்ணப்பிக்க முடியும் என்றும் இதுவரை 10 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார், மேலும் இந்த நாட்டின் பிரதமருக்கு இணையான பதவி ஒன்றை அவரே நியமனம் செய்து அதில் அவரே பதவியேற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கைலாஷ் நாட்டிற்கு எப்படி செல்ல வேண்டும்? இந்த நாட்டிற்கு எப்படி விசா எடுக்க வேண்டும்? என்று கேலி செய்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டின் கமெண்டில் ஒரு ரசிகர் ’விரைவில் நித்யானந்தா கைலாஷ் கிரிக்கெட் அணி என்ற ஒன்றை உருவாக்கி உங்களையே அதற்கு கேப்டனாக நியமிபார்’ என்று கேலியாக குறிப்பிட்டுள்ளார்

அஸ்வினின் கலகலப்பான ட்வீட்டும் அதற்கு பதிவாகி வரும் கேலியும் கிண்டலுமாக கமெண்ட் தளம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply