மாலை மரியாதை, பேண்ட் வாத்திய வரவேற்பு

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வரும் நிலையில் இதுகுறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் இருக்கும் காவல் துறையினருக்கும் வைரஸ் பரவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் இந்தூரில் அசிஸ்டண்ட் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டடார் பகவதி சரண் சர்மா என்ற இவர் கடந்த சில நாட்களாக தனி வார்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில் தற்போது அவர் முழுமையாக குணம் அடைந்து விட்டார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு செல்லும் வழியில் மாலை மரியாதையுடன் பேண்ட் வாத்திய வரவேற்பு அளிக்கப்பட்டது

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் குணமான ஒருவர் வீடு திரும்பியது அனைவரையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply