shadow

thambi duraiதமிழக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்றும் அதனால் கட்சி தொண்டர்கள் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அதிமுக நாடாளுமன்ற எம்.பியும், நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சமயபுரம் டோல்கேட் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தேர்தல் பொறுப்பாளரும் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசும்போது, ”மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் எந்த நலத்திட்டங்களையும் செயல்படுத்த வில்லை.

ஆனால், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் அறிந்து திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தியும் வருகிறார். கட்சி நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது முக்கியமல்ல. வரும் சட்டப்பேரவை தேர்தலில் சிறப்பாக பணியாற்ற கூடியவர்களாக இருக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவை தேர்தல் எந்த நேரத்திலும் நடைபெறலாம். அதனால், கட்சி தேர்தலில் வெற்றி பெறும் நீங்கள் இப்போதே தேர்தலுக்கான பணிகளை தொடங்க வேண்டும்” என்றார்.

Leave a Reply