சிம்பு-அனிருத்தின் பீப் பாடல் விவகாரம் குறித்து இசைஞானி இளையராஜாவிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டபோது அவர் கோபம் அடைந்த தகவல் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இதுகுறித்து இளையராஜாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் இளையராஜா போன்ற இசைப் பெரியோர்களிடம் எதைப்பற்றி கருத்துகள் கேட்பது என்ற வரம்பு வேண்டும். அவர் இசையமைத்த பாடல்களையே அவர் கேட்டு நான் பார்த்ததில்லை இந்த முட்டா பீப் பசங்க போட்ட பாட்ட பத்தி அவர் கிட்ட கேட்டது எனக்கு புடிக்கல.
ஏன் ரஜினி சாரோட சொந்தக்காரப் பையன் தானே அனிருத்து…? அவரக்கேளுங்க ஏன் தமிழ் தமிழ்னு உசுர விட்டாரே அந்த வெங்காயத்தோட அப்பா டி ஆர். அவங்க அபிப்ராயம் என்னன்னு கேட்டுப் போடுங்க. என் அன்புக்குரிய பத்திரிகை நண்பர்களே உண்மையாக உயர்ந்தோரை உள்ளம் கொதிக்க வைக்க வேண்டாம். இவ்வாறு கங்கை அமரன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
வெங்காயம், முட்டாப் பீப் பசங்க போன்ற வார்த்தைகளை கங்கை அமரன் சமூக வலைத்தளத்தில் பயன்படுத்தியுள்ளதால் இதுவும் ஒரு பிரச்சனையாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.