shadow

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. தவான் 94 ரன்களும், விராத் கோஹ்லி 48 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியின் மெண்டிஸ் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழுத்தினார்.

அடுத்து 265 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இலங்கை அணி ஆரம்பத்தில் இருந்தே நிதானமான ஆட்டம் ஆடியது. துவக்க ஆட்டக்காரர் பெராரே 64 ரன்கள் எடுத்தார். சங்கரகரா 103 ரன்கள் எடுத்து கடைசி ஓவர் வரை விளையாடினார். இறுதியில் இலங்கை அணி 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 265 ரன்கள் எடுத்தது.

ஆட்டநாயகனாக சங்கரகரா தேர்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தனது இரண்டாவது வெற்றியை பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிகமாக்கியுள்ளது.

Leave a Reply