shadow

ஆசிய கோப்பை கிரிக்கெட்: செப்டம்பர் 19ல் இந்தியா-பாகிஸ்தான் மோதல்

இந்த ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் அட்டவணை. நேற்று இரவு வெளியானது. இதன்படி வரும் செப்டம்பர் 19ம் தேதி பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் ஆட்டம் நடைபெறவுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 15-ம் தேதி துபாயில் ஆரம்பமாக உள்ளது. இதற்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று இரவு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகள் விளையாடுவது உறுதியாகிவிட்டது. மேலும் யூஏஈ, சிங்கப்பூர், ஓமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகளில் தகுதி பெறும் அணி இந்த போட்டியில் கலந்து கொள்ளும்

செப்டம்பர் 19ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டியும், செப்டம்பர் 28ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply