ஆசிய கோப்பை கிரிக்கெட். முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளின் அணிகள் விளையாடும் ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. நேற்றைய முதல் போட்டியில் இந்திய வங்கதேச அணிகள் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச முதலில் பீல்டிங் செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 83 ரன்கள் குவித்தார்.
167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடையே நடைபெறவுள்ளத்.
Leave a Reply
You must be logged in to post a comment.