ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் மாட்டுக்கறியையும் தடை செய்யுங்கள்/. பிரபல கிரிக்கெட் வீரர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும், கோலிவுட் திரையுலகமும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
ஐ.டி.ஊழியர்கள், மாணவர்கள் உள்பட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல்கொடுத்து வரும் நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் நாடு முழுவதும் மாட்டுக்கறிக்கும் தடை விதிக்க வேண்டும் என்று அஸ்வின் ரவிச்சந்திரன் தனது டுவிட்டரி தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.