ஆஷஷ் தொடர்: 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஷ் தொடர் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
கடந்த 29ஆம் தேதி ஆரம்பமான இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 67.1 ஓவர்களில் 281 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்ஸில் 145 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 79.1 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 124 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து வீரர் ஃபின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.