நடிகர் ஆர்யா முதல்முறையாக தயாரிப்பாளராகி தயாரிக்கப்பட்ட திரைப்படம் அமரகாவியம். இந்த படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த நடிகை நயன்தாரா, படத்தை பார்த்துவிட்டு அழுததாக கூறப்படுகிறது. உறுதியான மனம் கொண்ட நயன்தாராவையே இந்த படம் அழுக வைத்துவிட்டதே இந்த படத்தின் வெற்றியை உறுதி செய்திருப்பதாக அதன் இயக்குனர் ஜீவா சங்கர் கூறியுளார்.
ஆர்யாவின் சகோதரர் சத்யா, மியா ஜார்ஜ், தம்பி ராமைய்யா, அனந்த் நாக் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரகாவியம், விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சி ஒன்றை ஆர்யா, தனது நெருங்கிய நண்பர்களுகாக நேற்று நள்ளிரவில் ஏற்பாடு செய்தார். ஆர்யாவுடன் நடித்த நயன்தாராவும் இந்த படத்தை பார்க்க நேற்று வந்திருந்தார்.
படத்தை பார்த்து முடித்தபின்னர் நயன்தாரா, கதறியழுததாக கூறப்படுகிறது. எதற்கும் கலங்காத மனம் படைத்த நயன்தாராவையே இந்த படம் பாதித்துவிட்டதால் கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும் என இயக்குனர் கூறியுள்ளார். படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்ற நயன்தாரா, தனது படுக்கையறையில் கதறி அழுததாகவும், பின்னர் நீண்ட நேரம் கழித்து இயக்குனருக்கு போன் செய்து தன்னால் இன்னும் அந்த படத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.